Saturday, March 20, 2010

அருணோதயத்தின் ஆன்மிக விழிப்பில்


அருணோதயத்தின் ஆன்மிக விழிப்பில்
அடியாரனைவரும் எழுந்து நீராடி
ஆலய மணிகள் இசைத்து
அன்போடு பாடும் சுப்ரபாதம்..சுப்ரபாதம்..( )

சங்க நாதம் உன் துயில் நீக்கும்
தங்க மேனிக்கு தைலாபிஷேகம்
வாஞ்சையோடு நீராட்டி துடைத்து
பன்னீரில் கரைத்த சந்தனம் எடுத்து
கண்ணா உன் திருமேனி எங்கும் பூச..()

மகுடம் தன்னில் மயில்பீலி வைத்து
மலர்மாலை சூட்டி சலங்கை கட்டி
கோபியிட்டு பட்டுக் கோவணம் கட்டி
குருவாயூரப்பா குழந்தை கண்ணா
உன் கையில் வெண்ணெயை உருட்டி வைக்க..()

Thursday, March 11, 2010

மாயக் கண்ணன் சிரிக்கின்றான்


மாயக் கண்ணன் சிரிக்கின்றான் - எங்கள்
மன்னன் கண்ணன் சிரிக்கின்றான்
அன்புக் கண்ணன் சிரிக்கின்றான் (2) - எங்கள்
ஆசைக் கண்ணன் சிரிக்கின்றான்..(மாய)

கோடிகோடி அடியவர் கண்டு சிரிக்கின்றான்
நாடிநாடி வந்து சேரும் மாந்தர் கண்டு சிரிக்கின்றான்
பாடிபாடி புகழ்கின்ற பாடல் கேட்டு சிரிக்கின்றான்
ஆடிஆடி மகிழ்கின்ற ஆடல்கண்டு சிரிக்கின்றான்..(மாய)

குழலிசையின் சொந்தக்காரன் கைகொட்டிச் சிரிக்கின்றான்
கோபியர்கள் வாழ்வே ஆன கோபாலனே சிரிக்கின்றான்
காளிங்க நர்த்தனம் புரிந்த மாயன் கள்ளச் சிரிப்பு சிரிக்கின்றான்
கடமையை செய்ய சொன்ன கண்ணன் கன்னம் குழைய சிரிக்கின்றான்..(மாய)

நிரந்தரமாய் இனிவு கொண்டவனே


நிரந்தரமாய் இனிவு கொண்டவனே
நின் பேரழகைக் காண பேறு செய்தேன்
சுதந்திரமாய் பிருந்தாவனத்தில் சஞ்சரித்தவனே ( )

அழகுமிகு மயில்பீலி அணிந்தவனே
குழலினை தாங்கும் மென்வாயிதழ் உடையவனே
குழந்தையாக பல ஜாலங்கள் செய்தவனே
குவலயத்தை வாய் திறந்தே தாயிடம் காட்டியவன்

காதல் பொங்கும் உந்தன் கண்களை கண்டனரே
பொழிவு மங்கையர் மயங்கியே நின்றனரே(2)
ஒன்றுமே அறியாதவன் போன்றே நீயுமே
மாயக் குழலினை இசைத்தாயே சொல்லிடுவாய் ஏன் கண்ணா..()