
Monday, August 22, 2011
Thursday, May 6, 2010
வருவாய் வருவாய் வருவாய் கண்ணா!

வருவாய் வருவாய் வருவாய் - கண்ணா!
வருவாய் வருவாய் வருவாய்!
உருவாய் அறிவில் ஒளிர்வாய் கண்ணா!
உயிரின் அமுதாய் பொழிவாய் கண்ணா!
கருவாய் என்னுள் வளர்வாய் கண்ணா!
கமலத் திருவோ டிணைவாய் கண்ணா! (வருவாய்)
இணைவாய் எனதா வியிலே கண்ணா!
இதயத் தினிலே அமர்வாய் கண்ணா!
கணைவா யசுரர் தலைகள் சிதறக்
கடையூ ழியிலே படையோ டெழுவாய்! (வருவாய்)
எழுவாய் கடல்மீ தினிலே எழுமோர்
இரவிக் கிணையா உளமீ தினிலே
தொழுவேன் சிவனாம் நினையே கண்ணா!
துணையே, அமரர் தொழும்வா னவனே! (வருவாய்)
Wednesday, April 21, 2010
திருமலை வாழும் ஸ்ரீவேங்கடேசா..

திருமலை வாழும் ஸ்ரீவேங்கடேசா
பெறுநிதி தருவாய் எங்கள் ஸ்ரீனிவாசா
நிகரில்லா நின் பெருமை கூறிடுவேன் (2)
நீலமேக சியாமளமே இதயம் நிரம்பிடுவாய்..()
வீசிடும் பூங்காற்றின் சுகமே கண்டிடுவாய்
பறந்திடும் வண்டினங்கள் இசையை கேட்டிடுவாய்
அடியவர் குலம்காத்து அகமே மகிழ்வாய்
பூலோக வைகுந்தமாம் திருமலை காட்டிடுவாய்.. ( )
அலர்மேலு மங்கையவள் அழகினில் கலந்தவனே
அளவிலா நன்மைதரும் திருமலை வேந்தனே
கருணை விழிகளால் அருளை பொழிவாய்
கனிவான வாசனே எங்கள் ஸ்ரீனிவாசனே..( )
Subscribe to:
Posts (Atom)