Thursday, December 15, 2011

கண்ணா! கண்ணா! ஆனந்தக் கண்ணா!


கண்ணா! கண்ணா! ஆனந்தக் கண்ணா!
ஓடக்குழலும் கொண்டோடிவா கண்ணா!
தேவகி தந்ததோர் கண்மணிக் கண்ணா!
ஆனந்தக் கண்ணா! ஓடிவா கண்ணா!

காளிய நர்த்தனம் செய்ததோர் கண்ணா
ஆனந்தக் கண்ணா ஓடிவா கண்ணா!
கோவர்த்தனகிரி தூக்கிய கண்ணா
ஆனந்தக் கண்ணா ஓடிவா கண்ணா!

கம்ஸனை நிக்ரகம் செய்ததோர் கண்ணா
ஆனந்தக் கண்ணா ஓடிவா கண்ணா!
பக்தரைப் பாலிக்கும் கண்ணா கண்ணா
ஆனந்தக் கண்ணா ஓடிவா கண்ணா!