Wednesday, April 21, 2010

திருமலை வாழும் ஸ்ரீவேங்கடேசா..


திருமலை வாழும் ஸ்ரீவேங்கடேசா
பெறுநிதி தருவாய் எங்கள் ஸ்ரீனிவாசா
நிகரில்லா நின் பெருமை கூறிடுவேன் (2)
நீலமேக சியாமளமே இதயம் நிரம்பிடுவாய்..()

வீசிடும் பூங்காற்றின் சுகமே கண்டிடுவாய்
பறந்திடும் வண்டினங்கள் இசையை கேட்டிடுவாய்
அடியவர் குலம்காத்து அகமே மகிழ்வாய்
பூலோக வைகுந்தமாம் திருமலை காட்டிடுவாய்.. ( )

அலர்மேலு மங்கையவள் அழகினில் கலந்தவனே
அளவிலா நன்மைதரும் திருமலை வேந்தனே
கருணை விழிகளால் அருளை பொழிவாய்
கனிவான வாசனே எங்கள் ஸ்ரீனிவாசனே..( )

No comments: