Tuesday, March 2, 2010

யசோத நந்தபால கோபாலனே


யசோத நந்தபால கோபாலனே
ஏழை என்மீதேன் வன்மமோ
பேதை என் ஓலம் கேட்டுமே
பேசாதிருப்பதேன் கேசவா..()

நந்தகுமாரா நவனீத சோரா பிருந்தாவன வாசி கோவிந்தா
வெண்ணை அள்ளி உண்ட வேணுகானனே
மண்ணை அள்ளி உண்ட மதுசூதனா
பண்ணிசைத்த பாவையர்கள் உள்ளத்தை
கொள்ளை கொண்ட கோமள வண்ணனாம்..
கோமளமாம் அந்த கேரளம் தன்னில்
கோயில் கொண்ட குருவாயூரப்பா (2)
கோடி தவம் நான் செய்தாலுமே-உன்
கோலம் கண்பேனோ என் வாழ்விலே
தேட கிடைக்காத செல்வமே
தேவாதிதேவா நாராயணா..
நாராயணா நமோ நாராயணா
நாராயணா லஷ்மி நாராயணா
நாராயணா ஹரி நாராயணா...

No comments: