Monday, March 1, 2010

குழலூதி மனமெல்லாம்..


வரிகள் : ஊத்துக்காடு வேங்கட சுப்பையர்
ராகம் : காம்போதி
தாளம் : ஆதி
--------------------------------------
குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட பின்னும்
குறையேதும் எனக்கேதடீ - ஒரு சிறு
குறையேதும் எனக்கேதடீ (குழலூதி)

அழகான மயில் ஆடவும் - மிக
அழகான மயில் ஆடவும் - காற்றில்
அசைந்தாடும் கொடி போலவும்

அகமகிழ்ந்திலகும் நிலவொளி தனிலே தனைமறந்து புள்ளினம் கூட
அசைந்தாடி மிக இசைந்தோடிவரும் நலம் காண ஒரு மனம் நாட
தகுமிக எனஒரு பதம்பாட தகிடதமிதி என நடம் ஆட
கன்று பசுவினொடு நின்று புடைசூழ,
என்றும் மலருமுக..இறைவன் கனிவோடு (குழலூதி)

மகர முண்டலம் ஆடவும் - அதற்கேற்ப
மகுடம் ஒளி வீசவும்
மிகவும் எழிலாகவும் - காற்றில்
மிளிரும் துகில் ஆடவும்
அகமகிழ்ந்திலகும் நிலவொளி தனிலே தனைமறந்து புள்ளினம் கூட
அசைந்தாடி மிக இசைந்தோடிவரும் நலம் காண ஒரு மனம் நாட
தகுமிக எனஒரு பதம்பாட தகிடதமிதி என நடம் ஆட
கன்று பசுவினொடு நின்று புடைசூழ,
என்றும் மலருமுக..இறைவன் கனிவோடு (குழலூதி)

No comments: