
நிரந்தரமாய் இனிவு கொண்டவனே
நின் பேரழகைக் காண பேறு செய்தேன்
சுதந்திரமாய் பிருந்தாவனத்தில் சஞ்சரித்தவனே ( )
அழகுமிகு மயில்பீலி அணிந்தவனே
குழலினை தாங்கும் மென்வாயிதழ் உடையவனே
குழந்தையாக பல ஜாலங்கள் செய்தவனே
குவலயத்தை வாய் திறந்தே தாயிடம் காட்டியவன்
காதல் பொங்கும் உந்தன் கண்களை கண்டனரே
பொழிவு மங்கையர் மயங்கியே நின்றனரே(2)
ஒன்றுமே அறியாதவன் போன்றே நீயுமே
மாயக் குழலினை இசைத்தாயே சொல்லிடுவாய் ஏன் கண்ணா..()
No comments:
Post a Comment