Saturday, March 20, 2010

அருணோதயத்தின் ஆன்மிக விழிப்பில்


அருணோதயத்தின் ஆன்மிக விழிப்பில்
அடியாரனைவரும் எழுந்து நீராடி
ஆலய மணிகள் இசைத்து
அன்போடு பாடும் சுப்ரபாதம்..சுப்ரபாதம்..( )

சங்க நாதம் உன் துயில் நீக்கும்
தங்க மேனிக்கு தைலாபிஷேகம்
வாஞ்சையோடு நீராட்டி துடைத்து
பன்னீரில் கரைத்த சந்தனம் எடுத்து
கண்ணா உன் திருமேனி எங்கும் பூச..()

மகுடம் தன்னில் மயில்பீலி வைத்து
மலர்மாலை சூட்டி சலங்கை கட்டி
கோபியிட்டு பட்டுக் கோவணம் கட்டி
குருவாயூரப்பா குழந்தை கண்ணா
உன் கையில் வெண்ணெயை உருட்டி வைக்க..()

No comments: