Thursday, March 11, 2010

மாயக் கண்ணன் சிரிக்கின்றான்


மாயக் கண்ணன் சிரிக்கின்றான் - எங்கள்
மன்னன் கண்ணன் சிரிக்கின்றான்
அன்புக் கண்ணன் சிரிக்கின்றான் (2) - எங்கள்
ஆசைக் கண்ணன் சிரிக்கின்றான்..(மாய)

கோடிகோடி அடியவர் கண்டு சிரிக்கின்றான்
நாடிநாடி வந்து சேரும் மாந்தர் கண்டு சிரிக்கின்றான்
பாடிபாடி புகழ்கின்ற பாடல் கேட்டு சிரிக்கின்றான்
ஆடிஆடி மகிழ்கின்ற ஆடல்கண்டு சிரிக்கின்றான்..(மாய)

குழலிசையின் சொந்தக்காரன் கைகொட்டிச் சிரிக்கின்றான்
கோபியர்கள் வாழ்வே ஆன கோபாலனே சிரிக்கின்றான்
காளிங்க நர்த்தனம் புரிந்த மாயன் கள்ளச் சிரிப்பு சிரிக்கின்றான்
கடமையை செய்ய சொன்ன கண்ணன் கன்னம் குழைய சிரிக்கின்றான்..(மாய)

No comments: