Friday, March 5, 2010

நாடிவந்த செல்வம் தன்னை..


நாடிவந்த செல்வம் தன்னை ஏழைகட்கு நீ கொடுத்து
நாட்கள் முற்றும் பாடு கண்ணனை..
நல்லவர்கள் சொற்சரத்தில் உள்ளமுற்றுமே இணைத்து
நாளும் பாடு கீதை வர்ணனை..
நாளும் பாடு கீதை வர்ணனை..(நாடிவந்த)

தேடி ஓடு ஈசன் பாதம் ஓது ஓது தேவ வேதம்
செய்க என்றும் தெய்வசிந்தனை..
சிறிது மட்டும் சொன்னதுண்டு அதிகம் சொல்லத் தேவையில்லை
தீமையாகும் தெய்வ நிந்தனை..(நாடிவந்த)

கோடி கோடி வந்தபோதும் நோய்நொடிக்கு நீ இலக்கு
கூடுவாய் அத்தேவன் பாதமே..
கோகுலத்தில் லீலை செய்து போர்முகத்தில் கீதை சொன்ன
கோகுலனைப் பாடு உள்ளமே..(நாடிவந்த)

No comments: