Wednesday, March 3, 2010
சென்று வா நீ ராதே..
வரிகள் : ஊத்துக்காடு வெங்கட சுப்பையர்
ராகம் : ராகமாலிகா
………………………………………….
சென்று வா நீ ராதே இந்தப் போதே - இனி
சிந்தனை செய்திட நேரமில்லை (சென்று வா)
கன்று பசு மேய்க்கும் நாட்டத்திலே - அவரை
காண வரும் ஆயர் கூட்டத்திலே
சற்று நின்று பேசிட நேரமில்லை(2) - அவருக்கு
நேரில் வரஒரு தோதுமில்லையடி (சென்று வா)
சொன்னாலும் புரியாது ராதே - உனக்கு
தன்னாலும் தோன்றாது ராதே - அந்த
மன்னனை நம்பாதே - ஆயர்குல
மன்னனை நம்பாதே - அந்த
மனனனின் வாக்கெல்லாம் மண்தின்ற வாய்தானே
ராதே ராதே.. (சென்று வா)
உலகை அளந்தவருக்கு உன்னிடம் வந்தொருபொய்
மூட்டி அளப்பதும் பாரமா..
கண்ணன் நலம்வந்து ஆயிரம் சொன்னாலும் அதை
நம்பிவிட நியாயமாகுமா..
ஆயர்குலத் திறைவன் நந்தகோபன் திருமகன்
சொல்வதெல்லாம் உண்மையாகுமா..
தலத்தருகே கண்ணன் தனித்து வருவதென்றால்
தவப்பயன் ஆகுமே..வினைப்பயன் போகுமே..(சென்று வா)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment