Friday, March 5, 2010

புல்லாய்ப் பிறவி தரவேண்டும்


வரிகள் : ஊத்துக்காடு வெங்கட சுப்பையர்
ராகம் : செஞ்சுருட்டி
........................
புல்லாய்ப் பிறவி தரவேண்டும் - புனிதமான
பல கோடி பிறவி தந்தாலும்
பிருந்தாவனமிதிலொரு - (புல்லாய்)

புல்லாகினும் நெடுநாள் நில்லாது - ஆதலினால்
கல்லாய்ப் பிறவி தரவேண்டுமே கண்ணா
கமல மலரிணைகள் அணைய எனதுள்ளம்
புளகிதமுற்றிடும் பவமற்றிடுமே - (புல்லாய்)

ஒருகணம் உன்பதம் படுமெந்தன்மேலே
ம்றுகணம் நான் உயர்வேன் விண்மேலே
திருமேனி என்மேலே அமர்ந்திடும் ஒருகாலே
திருமகளென மலர்பெயர்ந்தடி உன்னைத்
தொடர்ந்த ராதைக்கு இடம்தருவேனே
திசைதிசை எங்கனும் பரவிடும் குழலிசை
மயங்கிவரும் பலகோபியருடனே (2)

சிறந்த ரசம்மிகு நடம் நீ ஆடவும்
சுருதியொடு லயமிக கலந்து பாடவும்
திளைப்பிலே வரும் களிப்பிலே
எனக்கிணை யாரென மகிழ்வேனே
தவமிகு சுரரோடு முனிவருடன் நான்
தனித்த பெரும்பேர் அடைவேனே
எவ்வுயிர்க்கும் உள்கலக்கும் இறைவனே
..யமுனை துறைவனே..(புல்லாய்)

No comments: