Saturday, February 27, 2010

பார்வை ஒன்று போதுமே..


வரிகள் : வெங்கட சுப்பையர்
ராகம் : சுருட்டி
தாளம் : ஆதி
........................
பார்வை ஒன்று போதுமே கண்ணா கண்ணா - கள்ள
பார்வை ஒன்று போதுமே கண்ணா கண்ணா - சங்கப்
பதும நிதி இரண்டும் வலியத் தந்தாலென்ன கள்ளப் (பார்வை)

கார்முகில் போல்வண்ண கதிரென்ன மதியென்ன
கருவிழி கடலினை சற்றே திறந்து
கருணை மழை பொழிந்தென் அகம் குளிரும் கள்ளப் (பார்வை)

அன்னை யசோதை அருகினிலே சென்று இவன்
வெண்ணை திருடிவந்த விந்தை சொல்லப் போனால்(2)
அன்னையின் பின்னை சென்று அணைத்துக்கொண்டு நின்று
'சொல்லாதே' என்று கண்ணா சொல்லிடும் –கள்ளப் (பார்வை

No comments: