Tuesday, February 9, 2010

குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா


ராகம் : சிவ ரஞ்சனி
தாளம் : ஆதி
இயற்றியவர் : ராஜாஜி
பாடியவர் : M.S. சுப்புலக்ஷ்மி
................................
பல்லவி
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றுமில்லை கண்ணா
குறையொன்றுமில்லை கோவிந்தா
அனுபல்லவி
கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
சரணம் 1
வேண்டியதைத் தந்திட வேங்கடேசம் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

ராகம் காபி
சரணம் 2
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா – கண்ணா
உன்னை மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார் என்றாலும்
குறையொன்றும் எனக்கில்லை மறைமூர்த்தி கண்ணா என்றாலும்
குறையொன்றும் எனக்கில்லை மறைமூர்த்தி கண்ணா
சரணம் 3
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்றாய வரதா
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

ராகம்: சிந்துபைரவி
சரணம்4
கலிநாளுக் கிரங்கி கல்லிலே இரங்கி
நிலையாக கோயிலில் நிற்கின்றாய் கேசவா
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
சரணம்5
யாரும் மறுக்காத மலையப்பா
உன் மார்பில் ஏதும் தர நிற்கும் கருணை கடலன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா
ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா

No comments: