Wednesday, February 24, 2010

வைகறை பாடும் இன்னிசையோடு..


நாராயணா நாராயணா ஹரி ஹரி நாராயணா நாராயணா
நாராயணா நாராயணா ஹரி ஹரி நாராயணா நாராயணா

நாராயணா நாராயணா ஹரி ஹரி நாராயணா நாராயணா
வைகறை பாடும் இன்னிசையோடு வாசல் திறக்கிறது
குருவாயூரப்பா என்ற கோஷம் அழைக்கிறது
முந்தைய தினத்தின் சந்தன காப்பில் முகுந்தன் முகமும் சிரிக்கிறது
கைகளில் அள்ளி கன்னத்தை கிள்ள அன்னையர் மனமும் துடிக்கிறது ( )

தைலாபிஷேகம் சங்காபிஷேகம் புஷ்பாபிஷேகம் நடக்கிறது
மயில்பீலி கிரீடம் கஸ்தூரி திலகம் அலங்காரம் கண்ணில் ஜொலிக்கிறது
திருக்கோயில் சுற்றி ஸ்ரீ தேவி யானை ஊர்வலம் தினமும் போகிறது
நாராயணா நாராயணா ஹரி ஹரி நாராயணா நாராயணா
நாராயணா நாராயணா ஹரி ஹரி நாராயணா நாராயணா
நாராயணா ஹரி நாராயணா
என்ற தாரக மந்திரம் ஒலிக்கிறது
அறியாத பிள்ளை அறியாததில்லை அவனின்றி அணுவும் அசைவதில்லை
குறையென்று வந்து முறையிட்ட பேர்கள் கோரிக்கை வீணே போவதில்லை
தீபங்கள் ஏற்றி நாமங்கள் சொன்னால் பாவங்கள் அருகே வருவதில்லை
வேதங்கள் கூறும் நாமங்கள் அன்றி வெற்றிக்கு வேறு வழியுமில்லை (வைகறை)

No comments: