Thursday, February 25, 2010

கண்ணே கண் உறங்கு


கண்ணே கண் உறங்கு.. கண்மனியே உறங்கு
கண்மூடி நீ உறங்கு..
மண்ணும் தான் உறங்க விண்ணும் தான் உறங்க
மன்னா நீ உறங்கு..
அழகு கண்ணா நீ உறங்கு..
ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ ( )

முத்தே மணியே முக்கனிச்சுவையே
முத்தம் தந்தால் தங்கமே நீயே
சத்தம் எழுந்தே சித்தத்தை மயக்குது
நித்தம் பல நூறு முத்தங்கள் கொடுத்திடு
காலை வரையில் கண்ணா நீ உறங்கு
நீ உறங்கும் அழகு கண்ணுக்கோர் விருந்து
ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ ( )

சிரிக்கின்ற அழகுக்கு எதை நான் தருவேன்
செய்கின்ற குரும்புக்கு எதை நான் தருவேன்
மழலை உன் பேச்சுக்கு எதை நான் தருவேன்
எதையும் தருவேன் என்னுயிரைத் தருவேன்
காலை வரையில் கண்ணா நீ உறங்கு
நீ உறங்கும் அழகு கண்ணுக்கோர் விருந்து
ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ ( )

No comments: