Monday, February 22, 2010

காவிரி சூழ்பொழில்...


காவிரி சூழ்பொழில் சோலைகள் நடுவினில் கருமணி துயில்கின்றது
கண்ணனின் நித்திரை வண்ணங்கள் காட்டிடும் ஸ்ரீரங்கம் தெரிகின்றது
ஸ்ரீரங்கம் தெரிகின்றது..(காவிரி)

மாவிலை தோரணம் வாயில்கள் தாண்டிட கோவில் ஒளிர்கின்றது(2)
மத்தள மேளங்கள் கொட்டி முழங்கிட மண்டபம் மலர்கின்றது..
மணிமண்டபம் மலர்கின்றது.. (காவிரி)

ஆறெங்கும் சுற்றினும் அவனருள் கிட்டிடும் ஒரிடம் ஸ்ரீரங்கமே
அந்த ரங்கம் யாவும் அந்த ரங்கன் அறிவான் அவன்தான் வைகுண்டமே
அவ்ன்தான் வைகுண்டமே..
போனது போகட்டும் இனியாவது நெஞ்சம் புனிதம் ஆகட்டுமே
புன்னகை புரிந்திடும் மன்னவன் பொற்பாதம் கண்களும் காணட்டுமே ..(காவிரி)

No comments: