Thursday, February 25, 2010
கண்ணனைத் தேடாத கண்ணுன்டோ..
கண்ணனைத் தேடாத கண்ணுன்டோ - என்
கண் பார்க்கும் யாவுமே நீயன்றோ!
காளிங்கன் தலைமேல் ஆடிய பாதம்
காணும் பாக்கியம் தர வேண்டும்.. (கண்ணனை)
என் மனம் என்கிற யமுனா நதியில்
எத்தனை கோடி ஆணவ அலைகள்
உன் திருப்பாதங்கள் ஆடட்டும் அலைமேல்
உள்ளம் அதற்கு நீதான் காவல்..(கண்ணனை)
பார்த்தனின் சாரதியாய் போரில் முழக்கிய
பாஞ்சசன்யத்தின் ஒலி கேட்கட்டும்.
போர்குரல் தூங்கிய பூமியில் மீண்டும்
பூரண அமைதியை அதுவே தரட்டும்..(கண்ணனை)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment