Thursday, February 11, 2010

அசைந்தாடும் மயிலொன்று ..


பாடல் : அசைந்தாடும் மயிலொன்று ..
வரிகள் : ஊத்துக்காடு வெங்கடசுப்பைய்யர்
ராகம் : சிம்மேந்திர மத்யமம்
……………………………………………………
அசைந்தாடும் மயில் ஒன்று காணும்
நம் அழகன் வந்தான் என்று சொல்வது
போல் தோன்றும்(அசைந்தாடும்)

இசையாறும் குழல் கொண்டு வந்தான்
இந்த ஏழேழு பிறவிக்கும் இன்ப நிலை தந்தான்
திசை தோறும் நிறைவாக நின்றான்
என்றும் திகட்டாத வேணு கானம் ராதையிடம் ஈந்தான்

எங்காகிலும் எமதிறைவா இறைவா
என மனனிறை அடியவரிடம் தங்கு மனத்துடையான்
அருள் பொங்கும் முகத்துடையான்
ஒரு பதம் வைத்து மறு பதம் தூக்கி நின்றாட
மயிலின் இறகாட மகர குழையாட மதி வதனமாட
மயக்கும் விழியாட மலரணிகளாட மலர் மகளும் பாட
இது கனவோ நனவோ என மன நிறை முனிவரும்
மகிழ்ந்து கொண்டாட(அசைந்தாடும்)

அசை போடும் ஆவினங்கள் கண்டு
இந்த அதிசயத்தில் சிலை போல நின்று
நிஜமான சுகம் என்று ஒன்று இருந்தால்
ஏழுலகில் இதையன்றி வேறெதுவும் அன்று
திசையாறும் கோபாலன் இன்று
மிக எழில் பொங்க நடமாட எதிர் நின்று ராதை பாட

எங்காகிலும் எமதிறைவா இறைவா
என மனனிறை அடியவரிடம் தங்கு மனத்துடையான்
அருள் பொங்கும் முகத்துடையான்
ஒரு பதம் வைத்து மறு பதம் தூக்கி நின்றாட
மயிலின் இறகாட மகர குழையாட மதி வதனமாட
மயக்கும் விழியாட மலரணிகளாட மலர் மகளும் பாட
இது கனவோ நனவோ என மன நிறை முனிவரும்
மகிழ்ந்து கொண்டாட (அசைந்தாடும்)

No comments: