Saturday, February 20, 2010

பல்லாண்டு பல்லாண்டு பாடுங்களேன்..


பல்லாண்டு பல்லாண்டு பாடுங்களேன் - அந்த
பரந்தாமன் ஆலயத்தை நாடுங்களேன்
எந்நாளும் அவன் நாமம் சொல்லுங்களேன்
இல்லை இல்லை என்போரை வெல்லுங்களேன் (பல்லாண்டு)

இளவேனில் காலத்து புஷ்பங்களே - எங்கள்
யமுனா நதிக்கண்ணன் நயனங்களே
தொடுவானில் தவழ்கின்ற மேகங்களே - எங்கள்
துவாரகை மாமன்னன் ரூபங்களே (பல்லாண்டு)

பாம்பணையில் பாற்கடலில் துயில்கின்றவன்
பக்தர்களின் குரல் கேட்டு எழுகின்றவன்
ஒர் நொடியும் உறங்காமல் உழைக்கின்றவன்
ஆந்த உலகத்தை போல் தினமும் சுழல்கின்றவன் (பல்லாண்டு)

No comments: