Friday, February 26, 2010
வந்ததுவும் போனதுவும்..
வரிகள் : வெங்கட சுப்பையர்
ராகம் : பிலஹரி
தாளம் : கண்ட சாபு
.............................
வந்ததுவும் போனதுவும்
இமைப்பொழுது ஆனாலும்
மனமன்றோ களவானதே..
தயிரோடு நவநீதம் களவிட..(வந்ததுவும்)
நந்தகோபன் செய்த தவம்
நல்லதொரு பயனாகி
இந்தவிதமாக வந்து
இன்பமுழு காட்டுதடி..(வந்ததுவும்)
காலினில் வழிந்த தயிர் கமலமலர்க் கோலமிட
கையில் வழிவாரும் வெண்ணெய்க் கான குழல் மூடியிட
நீலவண்ணக் கண்ணனிவன் நெட்டுமிழ்த்த தமுதாகி
நெஞ்சமெல்லாம் பொங்கி அவன் நினைவாலே ஆடலிட..(வந்ததுவும்)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment