
ராதா மாதவ கோபாலா
ராக மனோகரசீலா
இரவும் பகலும் நின்பத சிந்தனை
அல்லாமல் உயிரில்லை.. ( )
அலையும் மனம் அமைதி தேடி
அடிபணிந்தேன் கிரிதாரி
அகிலாண்டேஸ்வரன் நீ அல்லால்
அபயம் யார் தருவாரோ.. ( )
மனக்கோயில் தனில் நினைவைத்தேன்
காத்திருப்பேன் முராரி
கருணாசாகரன் நீ அல்லால்
கண்ணா ஓடி நீ வாராய்.... ( )
No comments:
Post a Comment