Thursday, February 25, 2010

ராதா மாதவ கோபாலா


ராதா மாதவ கோபாலா
ராக மனோகரசீலா
இரவும் பகலும் நின்பத சிந்தனை
அல்லாமல் உயிரில்லை.. ( )

அலையும் மனம் அமைதி தேடி
அடிபணிந்தேன் கிரிதாரி
அகிலாண்டேஸ்வரன் நீ அல்லால்
அபயம் யார் தருவாரோ.. ( )

மனக்கோயில் தனில் நினைவைத்தேன்
காத்திருப்பேன் முராரி
கருணாசாகரன் நீ அல்லால்
கண்ணா ஓடி நீ வாராய்.... ( )

No comments: