Friday, February 19, 2010

பிருந்தாவனம் பிருந்தாவனம்

பிருந்தாவனம் பிருந்தாவனம்
பெருமையின் மறுபெயரே பிருந்தாவனம்
ஸ்ரீகிருஷ்ணன் வாழ்கின்ற பிருந்தாவனம்
பிருந்தாவனம் பிருந்தாவனம் ( )

கிருஷ்ணா என குரல் கொடுத்தாலே போதும்
யசோதை மைந்தன் வந்திடுவான்
அல்லல் எல்லாம் தீர்த்திடுவான் கண்ணனே
ஆனந்தமாய் கைகொட்டி சிரித்திடுவான்
சரணம் கிருஷ்ணா சரணம் கிருஷ்ணா
சரணம் கிருஷ்ணா சரணம் கிருஷ்ணா..( )

எண்ணத்தில் கண்ணனையே நினைத்துவிட்டாலே
தங்க கிண்ணத்தில் அமுதம் தருவான்
வண்ண மலராய் மாறிடுவான் கண்ணனே
அகமகிழ்வை அவனே அளித்திடுவான்
சரணம் கிருஷ்ணா சரணம் கிருஷ்ணா
சரணம் கிருஷ்ணா சரணம் கிருஷ்ணா.. ( )

No comments: