Wednesday, February 24, 2010

காக்கைச் சிறகினிலே நந்தலாலா


வரிகள் : பாரதியார்
ராகம் : யதுகுல காம்போதி
தாளம் : ஆதி
......................................
காக்கைச் சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரிய நிறந் தோன்றுதையே நந்தலாலா! (காக்கை)

பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா! (காக்கை)

கேட்கும் மொலியிலெல்லாம் நந்தலாலா - நின்றன்
கீத மிசைக்குதடா நந்தலாலா!
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா - நின்னைத்
தீண்டுமின்பந் தோன்றுதடா நந்தலாலா! (காக்கை)

No comments: