
கண்ணின் கருமணியே கற்பகத் திருவடியே
காந்த வடிவழகே கருமுகில் வண்ணனே
தேன்சுவை போன்றவனே தெள்ளுதமிழ் ஆனவனே
யமுனா நதி கண்ட இன்ப நினைவலையே
பிருந்தாவன மன்னனே நீ உறங்கு
இதயமே ஸ்ரீ கிருஷ்ணா கண்ணுறங்கு
ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ ( )
நந்தகோபன் செல்வமே தேவகியின் திருமகனே
கள்ளச் சிரிப்பினிலே உள்ளம் கவ்ர்ந்தவனே
நேசமுடன் சுடராய் நிம்மதி தருபவனே
குழழினை இசைத்து குவலயம் மயங்க செய்திட வந்தவனே
ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ ( )
பார்த்தனுக்கு கீதை சொன்ன சாரதியே கண்ணுறங்கு
பாஞ்ச சன்னியத்தை ஒலித்தவனே உறங்கு
ராதையின் உள்ளமான இளமையே கண்ணுறங்கு
கீதையின் நாயகனே எங்களின் நாரணனே ஸ்ரீ கிருஷ்ணனே உறங்கு
ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ ( )
No comments:
Post a Comment