Monday, February 15, 2010
கீதை சொன்ன கண்ணன்
கீதை சொன்ன கண்ணன் வண்ணத் தேரில் வருகிறான்
கேட்டவர்க்கு கேட்டபடி வாழ்வு தருகிறான்..
அன்பு வள்ளல் வருகிறான்..
அன்பு வள்ளல் வருகிறான்..வருகிறான்..(கீதை சொன்ன)
நீல மேனி கோலம் காண கண்கள் மறுக்குமோ- அவன்
நிமிர்ந்த தோளும் விரிந்த மார்பும் நெஞ்சம் மறக்குமோ
வீரன் வடிவும் மீசை அழகும் வெற்றி ரகசியம் - அவன்
பாரதப் போர் நடத்தி வைத்த யுக்தி அதிசயம்
அது முக்தி ரகசியம்(கீதை சொன்ன)
அல்லிக்கேணி குளத்தின் அருகில் கள்ளன் சிரிக்கிறான் - திரு
அல்லிகேணி குளத்தின் அருகில் கள்ளன் சிரிக்கிறான்
அன்பு கொண்டு வருபவர்க்கு ஒன்று உரைக்கிறான்
சொல்லும் மந்திரம் எட்டெழுத்தில் சொர்க்கம் தோன்றுதே (2)
சொல்ல சொல்ல அய்யன் தோற்றம் வானில் நீண்டதே
விஸ்வரூபம் தோன்றுதே (கீதை சொன்ன)
பார்த்தனுக்கு பாடம் சொன்ன கீர்த்தன் வருகிறான்
பசித்தவர்க்கு விருந்தளிக்க அமுது கொணர்கிறான்
காப்பதற்க்கு கையில் ஏந்தும் சங்கு சக்கரம் - அதன்
கழல்களுக்கு விளக்கம் தானே பிரம்ம சூத்திரம்
நான்கு வேத சாஸ்திரம்(கீதை சொன்ன)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment