Thursday, February 25, 2010

ஆடாது அசங்காது வா கண்ணா


ஆடாது அசங்காது வா கண்ணா
ஆடாது அசங்காது வா கண்ணா…
உன் ஆடலில் ஈரேழு புவனமும்
அசைந்து அசைந்தாடுதே – எனவே
ஆடாது அசங்காது வா கண்ணா ( )

ஆடலைக் காணத் தில்லை அம்பலத்து இறைவனும் தன்
ஆடலை விட்டு இங்கே கோகுலம் வந்தான் (2)
ஆதலினால் சிறு யாதவனே – ஒரு
மாமயில் இறகுஅணி மாதவனே நீ ( )

சின்னஞ்சிறு பதங்கள் சிலம்பொலித் திடுமே – அதைச்
செவிமடுத்த பிறவி மனங்களித் திடுமே
பின்னிய சடை சற்றே வகை கலைந் திடுமே – மயில்
பீலி அசைந்தசைந்து நிலைகலைந் திடுமே
பன்னிரு கைஇறைவன் ஏறுமயில் ஒன்று
தன் பசுந்தோகை விரித்தாடி பரிசளித்திடுமே
பாடி வரும் அழகா..உனைக் காணவரும்
அடியார் எவராயினும்
கனக மணிஅசையும் உனது திருநடனம்
கண்பட்டுப் போனால் மனம் புண்பட்டுப் போகுமே ( )

No comments: