Sunday, February 14, 2010

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே


புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களே..
வண்டாடும் கங்கை மலர் தோட்டங்களே - எங்கள்
மதுசூதனன் புகழ் பாடுங்களே..(புல்லாங்குழல்)

பன்னீர் மலர் சொரியும் மேகங்களே - எங்கள்
பரந்தாமன் மெய்யழகை பாடுங்களே..
தென்கோடி தென்றல் தரும் ராகங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே..(புல்லாங்குழல்)

குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் - ஒரு
கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் - அந்த
ஸ்ரீ ரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்..(புல்லாங்குழல்)

பாஞ்சாலி தனை காக்க தன்கை கொடுத்தான் - அந்த
பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான்
பாண்டவர்க்கு உரிமை உள்ள பங்கை கொடுத்தான் - நாம்
படிப்பதற்க்கு கீதை எனும் பாடம் கொடுத்தான்.. (புல்லாங்குழல்)

2 comments:

T.NANDHINI said...

om namo narayanaya nama...

really super song

Thilaga. S said...

thank u Nandhini..
Jai Sri Krishna...!!!